இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தென்னிந்திய மொழிப்படங்கள் மட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்து வருபவர் காஜல்அகர்வால். நம்பர்-ஒன் இடத்துக்கு வரவில்லை என்றபோதும், முன்னணி நடிகை பட்டியலில் தொடர்ந்து தன்னை தக்க வைத்துக்கொண்டு வருகிறார். அந்தவகையில், விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்து விட்ட அவர், தற்போது அஜீத்தின் 57-வது படத்திலும் நடிக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில், விக்ரம், ஜீவா போன்ற நடிகர்களின் படங்களில் தற்போது நடித்து வருகிறார் காஜல்.
மேலும், சில நடிகைகளைப்போன்று கால்சீட் விசயத்தில் சொதப்பல் செய்யாத நடிகையான காஜல், அவுட்டோர்களுக்கு செல்லும்போது, தனக்கான படப்பிடிப்பு முடிந்த பிறகும் ஊரை சுற்றிப்பார்க்கிறேன் என்ற பெயரில் தயாரிப்பாளர் போட்டுக் கொடுத்த ஸ்டார் ஹோட்டல் அறையிலேயே பல நாட்களாக டேரா போடும் பழக்கம் துளியும் இல்லாதவராம். தனக்கு மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றதுமே, ஹோட்டல் அறைக்கு வந்ததுமே, பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு மும்பைக்கு பறந்து விடுகிறாராம். அதனால் சம்பள விசயத்தில் கறாராக பேசினாலும், தேவையில்லாத செலவுகளை தயாரிப்பாளர்களுக்கு இழுத்து விடாத நடிகை காஜல்அகர்வால் என்று அவரைப்பற்றி பெருமையாக சொல்கிறார்கள்.