பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாணா காத்தாடி அதர்வா, பாலாவின் பரதேசிக்குப் பிறகு கவனிக்கப்படும் நடிகரானார். அதன்பிறகு நடித்த சில படங்களில் சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாறினார். ஆனால் அப்படி உடலை வறுத்தி அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி கைகொடுக்கவில்லை. இருப்பினும், ஈட்டி படத்தில் அவர் நடித்த தடகள வீராங்கனை வேடம் அதர்வாவை பேச வைத்தது. அதோடு, சாப்ட்டான வேடங்களை விட அதிரடியான கதைகளுக்கு பொருத்தமான நடிகர் என்கிற அடையாளத்தையும் அந்த படம் வெளிப்படுத்தியது.
இருப்பினும், தற்போது ருக்குமணி வண்டி வருது, செம போதை ஆகாத, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என ஆக்சன் அல்லாத கதைகளில்தான் நடித்து வருகிறார் அதர்வா. இந்நிலையில், சமீபத்தில் அவரை சந்தித்த சில இளவட்ட டைரக்டர்கள், உங்களது கண்களில் ஒரு பவர் உள்ளது. அது ஆக்சன் ஹீரோவுக்கே உரித்தானது. அதனால் ஆக்சன் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தால் நீங்கள் பெரிய இடத்துக்கு வருவீர்கள் என்று அதர்வாவிடம் கூறியுள்ளனர். விளைவு, தற்போது தான் நடித்து வரும் படங்களில் ஏதேனும் ஒரு படம் சூப்பர் ஹிட்டானாலும் அந்த வேகத்தில் ஆக்சனுக்கு தாவி குதிக்க தயாராகி விட்டாராம் அதர்வா.