'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இது இந்த செய்தியின் தலைப்பு மட்டுமல்ல. புதிதாக உருவாக இருக்கும் ஒரு படத்தின் தலைப்பும் இதுதான். எம்.ஜி.ஆரின் “திருடாதே பாப்பா திருடாதே...” பாடலில் “திட்டம்போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. அதை சட்டம்போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது...” என்ற வரி வரும். அதில் ஒரு வரியை உருவி படத்துக்கு தலைப்பாக வைத்து விட்டார்கள்.
குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த சுதர் இயக்குகிறார். டூ மீடியா பப்ஸ் நிறுவனத்தின் சர்பில் பி.எஸ்.ரகுநாதன், பிரபு வெங்கடாச்சலம் தயாரிக்கிறார்கள். கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் நடிக்கிறார்கள். அஷ்வத் இசை அமைக்கிறர், மகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏவிஎம் புதிய பிள்ளையார் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.
“மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்துள்ள பாடலை மையமாக கொண்டு தான் திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற தலைப்பை நாங்கள் வைத்தோம். எப்படி மக்கள் திலகத்தின் பாடலானது ஒரு பாசிட்டிவான ஆற்றலை ரசிகர்கள் உள்ளத்தில் விதைத்ததோ, அதே போல் எங்களின் திட்டம் போட்டு திருடுற கூட்டம் திரைப்படமும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். முழுக்க முழுக்க பொழுது போக்கு திரைப்படமாக உருவாகி வரும் எங்களின் திட்டம் போட்டு திருடுற கூட்டம் திரைப்படமானது ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு செதுக்கப்பட்டு, அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்" என்கிறார் இயக்குனர் சுதர்.