தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அந்தக் காலத்தில் பின்னணி பாடகர், பாடகிகள் என்று யாரும் கிடையாது. நடிப்பவர்கள் தான் தங்கள் பாடலை தாங்களே பாடிக் கொள்ள வேண்டும். நடிகர் நடிகைகளுக்கு ராகத்தோடு பாடத் தெரிய வேண்டும் என்பது தனித் தகுதியாக இருந்தது. இதை உடைத்தெறிந்து பின்னணி குரலை அறிமுகப்படுத்தியது ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.
ஏவிஎம் நிறுவனம் 'ஸ்ரீவள்ளி' என்ற பெயரில் பிரமாண்ட படம் ஒன்றை தயாரித்தது. இதில் டி.ஆர்.மகாலிங்கமும், ருக்மணி தேவியும் இணைந்து நடித்திருந்தார்கள். படம் முடிந்து அதனை போட்டுப்பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு திருப்தியில்லை. டி.ஆர்.மகாலிங்கத்தின் குரல் கணீர் என்று இருக்கும். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ருக்மணியில் குரல் அமையவில்லை. இதனால் என்ன செய்யலாம் என்று செட்டியார் யோசித்தார்.
அப்போது 'சபாபதி' என்ற படம் வெளியாகி இருந்தது. அதில் பி.ஏ.பெரியநாயகி என்ற பாடகி பாடியிருந்தார். அதாவது பி.ஏ.பெரிய நாயகி நடிகை இல்லை. படத்தில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சி காட்சியில் அவரே தோன்றி இரண்டு பாடல்களை பாடியிருந்தார். அந்த காட்சியும், பாடல்களும் மிகவும் பிரபலமாகியிருந்தது. அவரையே 'ஸ்ரீவள்ளி'யில் பாட வைப்பது என்று முடிவு செய்தார் ஏவிஎம். மெய்யப்ப செட்டியார். ருக்மணியின் குரலுக்கு பதிலாக பி.ஏ.பெரியநாயகியின் குரலை பிலிமில் இணைக்க முடியுமா? என்று அன்றைய பிரபல ஒலிப்பதிவாளர் ஸ்ரீனிவாசராகவனுடன் ஆலோசித்தார்.
அப்போதுதான் -ஏற்கெனவே பதிவானவற்றை அழித்துவிட்டு அதற்கு பதிலாக புதிதாக பதிவு செய்யும் தொழில்நுட்பம் மும்பைக்கு வந்திருந்தது, உடனை அவரை மும்பைக்கு அனுப்பி அந்த தொழில்நுட்பத்தை அறிந்து வரச்செய்து, ருக்மணியின் குரலுக்கு பதிலாக பி.ஏ.பெரிய நாயகியின் குரலை பதிவு செய்தார். அந்த வகையில் முதன் பின்னணி பாடல் இடம்பெற்றது 'ஸ்ரீவள்ளி'யில், முதல் பின்னணி பாடகி பி.ஏ.பெரிய நாயகி.