சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
ஹீரோக்களை மட்டும் நம்ம ஊரில் உற்பத்தி பண்ணிவிட்டு, கதாநாயகிகளை வட இந்தியா, பெங்களூரு, கேரளா என பல மாநிலங்களில் இருந்து கடன் வாங்கி இப்போதுவரை காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த தமிழ்சினிமாவில் அவ்வப்போது சில தமிழ் பெண்களும் நடிகைகளாக அறிமுகமாகத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு பெண்ணாக தென்றலாக நுழைந்து தமிழ்த்திரையுலகை தனது நடிப்பால் தலைநிமிரவைத்த தமிழச்சி தான் சமந்தா. அட.. தெலுங்கு ஹீரோவை காதலித்து கல்யாணம் செய்துகொள்ளப்போகிறார் என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..
அப்படிப்பட்ட சமந்தா படித்தது சென்னையில் தான்.. அதுவும் பள்ளிப்படிப்பை படித்தது பல்லாவரத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் மெட்ரிக் பள்ளியில் தான். படிக்கும்போதே சமந்தா சமத்துப்பிள்ளையாக இருந்திருக்கிறார்.. பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் இவர் அதிக மதிப்பெண்களும் முதல் ரேங்க்கும் எடுத்ததை பார்த்து இவரது வகுப்பு ஆசிரியை, சமந்தா இந்த பள்ளியின் சொத்து என பாராட்டியிருக்கிறார்.. வீட்டில் சமந்தாவும் அவரது அம்மாவும் வேறு எதையோ ஒன்றை தேடப்போக அவரது மார்க் ஷீட் கண்ணில் பட்டிருக்கிறது.. உடனே மகளை பார்த்து அம்மா பெருமிதப்பட, மகளோ இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளலாம் என தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.