விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
நடிகர் ரஜினி நடித்து, இயக்குனர் ரஞ்சித் இயக்கியுள்ள படம், கபாலி. தாணு தயாரித்துள்ள இப்படம், ஜூலை, 22ல் வெளியாக உள்ளது. சமீபகாலமாக படங்கள் வெளியாகும் அன்றோ, அதற்கு முதல்நாளோ இல்லை மறுநாளோ சம்பந்தப்பட்ட படங்கள் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி விடுகின்றன. ‛கபாலி படமும் இணையதளங்களில் வெளியாக கூடும் என்பதால் இதைதடுக்க கோரி, தயாரிப்பாளர் தாணு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்..
தாணு அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: சமீபகாலமாக, இணையதளங்கள் மூலம், புதிய திரைப்படங்கள் திருடப்படுவது, திரைத்துறைக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசும், மத்திய அரசும், திருட்டு, விசிடியை தடுக்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்த போதும், அதை தீவிரமாக செயல்படுத்துவதில்லை. இதற்கு முன் நான் தயாரித்த, தெறி, கணிதன் படங்களும் காப்புரிமை மீறப்பட்டு, இணைய தளங்களில் வெளியாகின. இதனால், எனக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதேபோல, கபாலி திரைப்படம், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக அஞ்சுகிறேன். எனவே, கபாலி திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட தடை உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன் நேற்று(ஜூலை 14-ம் தேதி) விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்துவிட்டு இதன் மீதான தீர்ப்பை இன்று(ஜூலை 15-ம் தேதி) வழங்குவதாக கூறியிருந்தார். அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் வந்தபோது, ‛‛கபாலி படத்தை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களை உடனடியாக முடக்க வேண்டும், அதோடு முறையான அனுமதியின்றி இயங்கும் 200க்கும் மேற்பட்ட இணையதளங்களையும் முடக்க வேண்டும். உள்ளூர் கேபிள் டிவிக்களிலோ, பேருந்துகளிலோ கபாலி படம் திரையிடப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.