இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் கவிஞர்கள் திருநாளாக கொண்டாடி வருகிறார். அதன்படி இந்தாண்டு மதுரையில், வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிஞர் வைரமுத்து பிறந்த நாள், கவிஞர்கள் திருநாள் நிகழ்ச்சி நடந்தது.
இதில், வைரமுத்து பேசியதாவது... ‛‛கைதட்டல் தான் ஒரு கவிஞனுக்கு சுவாசம். தமிழை நேசிக்கும் கவிஞன் நேர்மையானவன், யாருக்கும் அடிமை ஆகாதவன். இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் இருக்கிறது. மது, புகையை இன்று முதல் தொட மாட்டேன் என, இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும். தமிழை விதைத்தால் பண்பாட்டை அறுவடை செய்யலாம். தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனங்களில், தமிழ் மொழியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்.
இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், வைரமுத்து, இலக்கியங்களை படித்தவர். அவர் எழுதிய பாடல்களை திருத்தித் தரச் சொல்லி, அவரிடம் நான் கேட்டதே இல்லை, என்றார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பேசுகையில், வைரமுத்து பல விருதுகளை பெற்றிருக்கிறார்; நான்அவருக்கு, கவிக்கடல் என்ற விருதை தருகிறேன், என்றார்.
ஈழத்து கவிஞர்கள் ஏ.ஆர்.ஏ.ஜமீல், நெளபல்க்கு விருது வழங்கப்பட்டது. மதுரை, தேனி மாவட்டத்தை சேர்ந்த, தமிழ்வழிக் கல்வி கற்ற மாணவர்கள் ஆறு பேருக்கு உயர் கல்விக்காக நிதி அளிக்கப்பட்டது. மரபின் மைந்தன் முத்தையா, பேராசிரியை விஜயசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெற்றி தமிழர் பேரவை பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.