ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் மாணவர் ஸ்ரீகாந்தன், தப்பு தண்டா படம் மூலம் இயக்குனராகி உள்ளார். யதார்த்த சினிமாவை, தமிழில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் இயக்குனர் பாலு மகேந்திரா. இவரது மாணவர் ஸ்ரீகாந்தன், தப்பு தண்டா படம் மூலம், இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில், இயக்குனராக உருவாகியுள்ள முதல் மாணவர் ஸ்ரீகாந்தன். இதற்கு முன், அசப்டன்ஸ், ஐடன்டிட்டி, கலர்ஸ் உள்ளிட்ட பல குறும்படங்களை இயக்கி விருதுகளை பெற்றுள்ளார். தயாரிப்பாளர்கள் ராஜன் - சத்ய மூர்த்தி தயாரிக்கும், தப்பு தண்டா படத்தில் ஒளிப்பதிவாளராக வினோத் பாரதி, இசையமைப்பாளராக நரேன் பாலகுமார் பணியாற்றி வருகின்றனர்.
படம் குறித்து, ஸ்ரீகாந்தன் கூறியதாவது: நான் இயக்கிய, ஐடன்டிட்டி என்ற குறும்படம், என்னை இயக்குனர் பாலு மகேந்திராவிடம் அழைத்து சென்றது. அவர் அளித்த ஊக்கமும், நம்பிக்கையுமே, என்னை, தப்பு தண்டா படத்தின் இயக்குனராக உருவாக்கி இருக்கிறது. பாலு மகேந்திரா படம் யதார்த்தமாக இருக்கும் என்ற கருத்து மக்களிடம் இருந்து வருகிறது.
அவரது, சதி லீலாவதி, ரெட்டைவால் குருவி படங்கள், மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளன. அந்த படங்களை இன்று பார்த்தாலும், சிரிப்பிற்கு எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது. அந்த வழியை தான், நான் பின் தொடர்கிறேன். கேமராவை, ஆன் செய்யும் முன், என்னை மனதில் நினைத்து கொள்ளுங்கள் என்று, பாலு மகேந்திரா கூறிய வார்த்தை இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவரது பெயருக்கு பெருமை சேர்க்கும் மாணவனாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.