‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கில்லி படத்தில் தனக்கு முன்னபின்ன சம்பந்தமே இல்லாத திரிஷாவை காப்பாற்ற ஓடிக்கொண்டேயிருப்பார் விஜய். அதன்பிறகுதான் அவர்களுக்கிடையே காதல் உருவாகும். ஆனால், தற்போது கெளதம்மேனன் இயக்கி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு-மஞ்சிமாமோகன் ஆகிய இருவரும் உயிருக்கு உயிராக காதலிப்பார்களாம். ஆனால் இருவர் வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர்களை பிரிக்க ஒரு அடியாள் கூட்டம் துரத்துவார்களாம். இதனால் அவர்கள் நகரத்தில் இருந்து கிராமங்களை நோக்கி ஊர் ஊராக ஓடி ஒழிப்பார்களாம். கடைசியில் தில்லாக எதிர்த்து நின்று எப்படி காதலில் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் அப்படத்தின் கதையாம்.
அதேபோல், விஜயசேதுபதி- லட்சுமிமேனன் இணைந்து நடித்துள்ள றெக்க படத்திலும் அவர்கள் காதலிப்பதை இரண்டு ஊர் மக்களும் எதிர்பார்ப்பார்களாம். இதனால் அவர்களை பிரிக்க இரண்டுதரப்பிலும் பெருங்கூட்டமே திரளுமாம். இதனால் அவர்கள் இருவரும், ஒவ்வொரு ஊராக ஓடிக்கொண்டேயிருப்பார்களாம். அந்த வகையில், அச்சம் என்பது மடமையடா, றெக்க இரண்டு படங்களுமே காதல் கதையில் கிட்டத்தட்ட எதிர்ப்பை மீறி காதலர்கள் இணையும் கதையில் தான் தயாராகிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.