'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராம நாராயணன் தொடங்கிய தேனாண்டாள் பிலிம்சை தற்போது அவரது மகன் என்.ராமசாமி நடத்தி வருகிறார். சிறு பட்ஜெட் படங்களை தயாரித்து வந்த நிறுவனம் தற்போது பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனம் தயாரித்த 'தில்லுக்கு துட்டு' படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தேனாண்டாள் பிலிம்ஸ் இதுவரை 99 படங்கள் தயாரித்துள்ளது. தனது 100வது படத்தை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. 'பாகுபலி' போன்ற வரலாற்ற பின்னணி கொண்ட படத்தை 200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதனை சுந்தர்.சி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராகும் இந்தப் படத்திற்கு 'சங்கமித்ரா' என்று டைட்டில் வைத்துள்ளனர்.
மூன்று மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். 'பாஜிராவ் மஸ்தானி' என்ற பாலிவுட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். அடுத்த மாதம் இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடக்கிறது. ஹாலிவுட் சண்டை கலைஞர்கள், கிராபிக்ஸ் கலைஞர்கள், உடை அலங்கார கலைஞர்கள் பணியாற்ற பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 200 கோடியில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது 'சங்கமித்ரா'.