ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராம் சரணுடன் துருவா படத்தில் நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் அடுத்து டோலிவுட்டின் பிரின்ஸ் மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார். இவ்விரு படங்களைத் தொடர்ந்து கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நாகசைதன்யா நாயகனாக நடிக்கும் படத்திலும் ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றாராம்.
நாகார்ஜூனா நடிப்பில் சொக்கடே சின்னி நயன எனும் வெற்றிப் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணா அடுத்ததாக நாகார்ஜூனாவின் அன்னபூர்னா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா நாயகனாக நடிக்கவிருக்கும் அப்படத்தின் பூஜை ஏப்ரல் 22ல் நடைபெற்றது. அப்படத்தில் நடிகை சமந்தா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது, நாகசைதன்யாவை திருமணம் செய்துகொள்ள சமந்தா தயாராகி வருகின்றார்.
திருமணத்திற்கு பின்னர் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ள சமந்தா ஏற்கனவே தனுஷின் வடசென்னை படத்திலிருந்து விலகிக்கொண்டார். அதே போல் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் படத்திலிருந்தும் சமந்தா விலகிவிட்டாராம். இதனால் இப்படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.