'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் சைப் அலிகான் - கரீனா கபூர். இவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கரீனா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். தற்போது கரீனா, கர்ப்பமாக இருக்கிறார், டிசம்பர் மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. இதனால் படங்களில் நடிப்பதை தவிர்த்துள்ளார் கரீனா.
இந்நிலையில், கரீனா-சைப் இருவரும் லண்டனில் இருந்தபோது, கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பரிசோதித்து பார்த்ததாகவும், அதில் ஆண் என்பதை இருவரும் உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது. இது சட்டபடி குற்றமாகும், இதனால் இருவருக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதை கரீனா-சைப் தம்பதியர் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து கரீனாவின் செய்திதொடர்பாளர் கூறியிருப்பதாவது... ‛‛முற்றிலும் இது பொய்யான செய்தி, அந்தமாதிரி ஒரு சம்பவமே நடக்கவில்லை். எந்த டாக்டர்களிடமும் கரீனாவும், சைப்பும் இதுப்பற்றி பேசியதில்லை, பரிசோதித்ததும் இல்லை. இது யாரா கற்பனையில் கட்டிவிட்ட செய்தி. மேலும் இருவரும் சமூகத்தில் பொறுப்புடன் நடப்பவர்கள். ஆகையால் தேவையில்லாமல் பொய்யான தகவலை பெரிதுப்படுத்தாதீர்கள்'' என்று கூறியுள்ளார்.