‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை சோனாக்ஷி சின்ஹா. நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் அகிரா என்ற படத்தில் ஒரு மிரட்டலான ரோலில் நடித்திருக்கிறார். சோனாக்ஷி, அடுத்தப்படியாக நூர் என்ற படத்தில் பத்திரிகையாளராக நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.
இந்நிலையில் ராஜஸ்தானில் பிரபலமாக இருந்த ராணி ரத்னாவதியின் வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது. இதில் சோனாக்ஷி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த வேடத்தில் நடிக்க முதலில் கரீனாவிடம் பேசப்பட்டதாகவும், அவர் மறுக்கவே இப்போது சோனாக்ஷி அந்த ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை அபாஸ் - மஸ்தான் இயக்க இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியிருக்கிறது.