சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கௌதம் மேனன் தயாரிப்பில் பிரேம் சாய் இயக்கத்தில் ஜெய், யாமி கௌதம், சந்தானம் மற்றும் பலர் நடித்த 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' படம் நாளை மறுநாள் ஜுலை 15ம் தேதியன்று வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது படத்தை அன்றைய தினம் வெளியிடாமல் தள்ளி வைத்து விட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சந்தானம் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' படத்தின் வெற்றியை வைத்து இந்தப் படத்தை இந்த வாரம் வெளியிட முடிவெடுத்திருந்தார்கள். ஆனால், அந்தப் படம் நன்றாகப் போய்க் கொண்டிருப்பதாலும், அடுத்த வாரம் 'கபாலி' படம் வெளியாக இருப்பதாலும் 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதனால்தான் படத்தைத் தள்ளி வைத்து விட்டார்கள் என்கிறார்கள்.
அதே சமயம், இந்த வாரம் சில சிறிய படங்கள் வெளியாக உள்ளன. “சும்மாவே ஆடுவோம், ஒன்பதிலிருந்து பத்து வரை, கோடம்பாக்கத்தில் கோகிலா, கிழக்கு சந்து” ஆகிய படங்களுடன் 'பிரபாஸ்' டப்பிங் படமும், வெளியாக உள்ளன.
'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்தை ஏற்கெனவே கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். அதன் பின் மார்ச் மாதத்தில் வெளியிட முடிவெடுத்தார்கள். கடைசியாக நாளை மறுநாள் வெளியாக திட்டமிட்டார்கள். ஆனால், படமோ படப்பிடிப்பு போலவே தொடர்ந்து வெளியீட்டிலும் தள்ளித் தள்ளி போய்க் கொண்டிருக்கிறது. 'தனியார் அஞ்சல்' என்றால் அது சீக்கிரமே வரும் என்பார்கள் ஆனால், இது 'தள்ளிப் போகும் அஞ்சல்' ஆக மாறிக் கொண்டிருக்கிறது.