இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
திருட்டு விசிடி தயாரிப்பு, மற்றும் ரிலீசுக்கு முன்பே இணைய தளங்களில் படங்கள் வெளிவருவது அதிகரித்துள்ளது. சமீபத்தில் 'உத்த பஞ்சாப்' படம் ரிலீசுக்கு முன்பு வெளிவந்து பரபரப்பானது. அப்படி வெளியான பிரதி தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்ட பிரிதி என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது ஒரு படம் தணிக்கைக்கு அனுப்பும்போது அங்கிருந்து அது திருட்டு விசிடி கும்பலுக்கும், போலி இணையதளங்களுக்கும் போய் சேருகிறது. தமிழிலும் இமான் டம்மியாக இசை அமைத்து சென்சாருக்கு அனுப்பிய ஒரு படம் இணையதளத்தில் வெளியானதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் மத்திய தணிக்கை வாரியம் இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க புதிய நடைமுறை ஒன்றை கொண்டு வர இருக்கிறது. இனி தணிக்கை குழுவிற்கு டிஜிட்டல் பிரதியை பாஸ்வேர்டுடன் தான் அனுப்ப வேண்டும். தணிக்கை குழு படம் பார்க்கும்போது பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஒருவர் வந்து பாஸ்வேர்டை ஒப்பன் பண்ண வேண்டும். தணிக்கை குழு குறிப்பிடும் திருத்தங்கள்ல படங்கள் காப்பியை படம் வெளியாகும் நாள் அன்று தணிக்கை குழுவிடம் கொடுத்தால் போதும். இதனால் படத்தின் முழு பொறுப்பும் தயாரிப்பு நிறுவனத்திடமே இருக்கும். இந்த திட்டத்தை முதல் கட்டமாக இந்திப் படங்களுக்கும். பின்னர் மற்ற மொழி படங்களுக்கும் விரிவு படுத்த தணிக்கை குழு முடிவு செய்திருக்கிறது.