தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கதையின் நாயகியாக நடிக்கத் தொடங்கிய பிறகு கதை விசயத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார் த்ரிஷா. முன்பெல்லாம் அம்மா, எந்த டைரக்டரிடம் கதை கேட்டு, ஓகே சொன்னாலும் இவருக்கும் ஓகேதான். ஆனால் இப்போது அப்படியல்ல, கதை விசயத்தில் திரிஷாவையும் திருப்திபடுத்த வேண்டியதிருக்கிறதாம். அதுவும், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்கள் கேட்பது போல் சீன் பை சீன் விலாவாரியாக கேட்கும் த்ரிஷா, இடையிடையே தனக்கு பிடிக்காத காட்சிகள் இருந்தால் இது என் இமேஜை கெடுத்து விடும், அதை இந்த மாதிரி மாற்றிக்கொள்ளுங்கள் என்று டைரக்டர்களுக்கே சீன் சொல்கிறாராம்.
அதோடு நில்லாமல் டைரக்டர்களின் முகத்துக்காக கதைகளை ஓகே சொல்வதையும் அவர் நிறுத்தி விட்டார். தான் என்ஜாய் பண்ணி நடிக்கிற அளவுக்கு கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே ஓகே சொல்கிறார். அப்படி தற்போது திரிஷா நடிக்கும் படங்களில் நாயகி, கொடி, மோகினி ஆகிய படங்களில் நடித்து வரும் வேடங்களில் இதுவரை அவர் எந்த படத்திலும் நடிக்காத வித்தியாசமான வேடங்களாம். அந்த வகையில், நாயகி, மோகினி படங்களில் பேய் வேடங்களில் நடித்து வரும் த்ரிஷா, கொடி படத்தில் பள்ளியில் படிப்பது முதல் பின்னர் தனுசுக்கு ஜோடியாகிறது வரை அவருடன் எந்நேரமும் சண்டை போட்டுக்கொண்டேயிருக்கும் வாயாடி பெண்ணாக நடித்திருக்கிறாராம். அப்படி அவர்கள் போடும் சண்டையே ஒருகட்டத்தில் காதலில் விழ வைத்து விடுமாம். இந்த வேடம் தனக்கு சவாலாக இருந்ததாகவும், அதே சமயம் அதிகமாக என்சாய் பண்ணி நடித்ததாகவும் கூறினாராம் திரிஷா.