மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
மாபெரும் வசூலை குவித்த சுல்தான் திரைப்பட கதைக்காக, தனக்கு தர வேண்டிய, 20 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக, பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் மீது உண்மையான சுல்தான் புகார் கூறியுள்ளார்.
கடந்த வாரம், பிரபல நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம், உலகம் முழுவதும், 320 கோடி ரூபாய் வசூலை குவித்தது; இது, உ.பி., மாநிலம், முசாபர் நகரைச் சேர்ந்த சபீர் பாபா என்கிற மல்யுத்த வீரரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்.
இந்நிலையில், படக்குழுவினர் கதைக்காக தனக்கு தர வேண்டிய காப்புரிமை தொகை, 20 கோடி ரூபாயை தராமல் ஏமாற்றிவிட்டதாக சபீர் பாபா புகார் அளித்துள்ளார். அந்த படத்தில் நடித்த சல்மான் கான், அனுஷ்கா சர்மா, இயக்குனர் அப்பாசுக்கு எதிராக, நம்பிக்கை மோசடி, ஆசை காட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.