இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'த்ரிஷா இல்லேன்னான நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவவன் அடங்காதன்' (டிரிபிள் ஏ) என்ற படத்தை இயக்குகிறார். இதற்கு போட்டியாக மன்சூரலிகான் 'ஆடு மேய்ச்சவனும் அருவாளும் அழகான பொண்ணும்' (டிரிபிள் ஏ) படத்தை தனது ராஜ் கென்னடி பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். விக்னேஷ் பரிமளம் என்பவர் இயக்குகிறார்.
நான் எதையும் வித்தியாசமாக செய்கிறவன். இந்த படத்தையும் வித்தியசாகமாக செய்கிறேன். ஆடு மேய்ப்பவர்களின் கதை. ஆடுமேய்ப்பவர்கள் அரிவாள் தூக்கினால் என்னவாகும் என்பது திரைக்கதை. 5 ஹீரோக்கள், 5 ஹீரோயின்களை அறிமுகப்படுத்துகிறேன். நான் முக்கிய கேக்டரில் நடிக்கிறேன். சரவெடி சரவணன் வசனம் எழுதுகிறார். எஸ்.பி.விஜய் இசை அமைக்கிறார். நான் தான் இசை அமைக்க இருந்தேன். எனக்கு நேரம் இல்லாததல் விஜய்யிடம் கொடுத்து விட்டேன். ரேஷன் அரசி பழைய சோறு புரொடக்ஷன், மினிமம் காஸ்ட் மேக்சிமம் பிராபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. படப்பிடிப்புகள் சென்னை மற்றும் திண்டுக்கல் பகுதியில் நடக்கிறது என்கிறார் மன்சூரலிகான்.