‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 'ஸ்ரீவெங்கடேஷ்வரா' என்ற பக்தி சேனல் நடத்தப்பட்டு வருகிறது. இது திருப்பதி திருமலையிலிருந்து ஒளிபரப்பாகிறது. இந்த சேனல் தெலுங்கு மொழியில் மட்டும் ஒளிபரப்பாகும். தினமும் ஒரு மணிநேரம் தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும். தமிழில் முழுநேர பக்தி சேனல் தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசுக்கு விண்ணப்பித்தது.
24 மணி நேர தமிழ் பக்தி சேனலுக்கான சேட்டிலைட் வசதி, தொழில்நுட்ப வசதி அனைத்தையும் செய்து முடித்து விட்டது தேவஸ்தானம். அரசின் அனுமதி கிடைத்துவிட்டால் ஒளிபரப்பை துவக்கி விடும். தற்போது ஆந்திராவை சேர்ந்தவரும் திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தருமான வெங்கய்யா நாயுடு தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகிவிட்டதால் எளிதில் அனுமதி கிடைக்கும் என்ற தெரிகிறது. சமீபத்தில் டில்லி சென்ற திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் டில்லியில் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து கோரிக்கை வைத்து வந்துள்ளார். எனவே விரைவில் தமிழில் 24 மணி நேர பக்தி சேனல் தொடங்கப்படும் என்று தெரிகிறது.