தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிம்பு நடித்த படங்கள் வருடக்கணக்கில் வெளியாகாமல் முடங்கிப்போய்விடுவதால், அவருடன் நடிக்க முன்னணி நடிகைகள் மத்தியில் ஒருவித தயக்கம் நிலவுகிறது. அதன் காரணமாகவே சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நழுவ ஆரம்பித்து விடுகிறார்களாம். 'த்ரிஷா இல்லானா நயன்தாரா' என்ற ஆபாசப் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உருவாகி வரும் 'ஏஏஏ' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகளை அணுகியுள்ளனர்.
ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், ஸ்ரீதிவ்யா ஆகியோரை அணுகினார்களாம். சொல்லிவைத்தார்போல் அனைவருமே டேட் இல்லை என்று நழுவிவிட, கடைசியில் ஸ்ரேயா சரணை கமிட் பண்ணியுள்ளனர். சில வருடங்களுக்கு முன் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா தற்போது மார்க்கெட் இழந்து வீட்டில் சும்மா இருக்கிறார். இந்நிலையில்தான் சிம்புவுடன் நடிக்க கேட்டிருக்கின்றனர். வீட்டில் சும்மா உட்காருவதற்கு பதில் சிம்புவுடன் நடிப்பதில் தப்பில்லை என்ற எண்ணத்தில் ஏஏஏ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் ஸ்ரேயா. இந்த தகவலை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் தகவல் வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா. திண்டுக்கல் அருகேயுள்ள தாடிகொம்பு எனும் ஊரில் உள்ள சௌந்தர ராஜ பெருமாள் கோயிலில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ஸ்ரேயா. அந்தக்கோயில் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்தது என்ற சரித்திர தகவலையும் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.