'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு |
ஷாரூக்கான் நடிப்பில் ‛ரயீஸ்' படமும், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் ‛காபில்' படமும் ஒரே நாளில் அதாவது 2017, ஜன.,26ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இரண்டு பெரிய படங்கள் ஒரேநாளில் ரிலீஸானால் படத்தின் ரிலீஸ் பாதிக்கப்படும் என்று இரண்டு படக்குழுவும் நினைக்கிறது. இதனால் மோதலை தவிர்க்க இரண்ட படக்குழுவினரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் இரண்டு பெரிய படங்கள் ஏன் ஒரே நாளில் ரிலீஸாக கூடாது என்று ஷாரூக்கான் பதிலளித்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛பொதுவாக பெரிய படம் என்றால் குறைந்தது 3500 முதல் 4000 தியேட்டர்களில் ரிலீஸாகும். அப்படிபார்க்கையில் ஒரேநாளில் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸாகும்போது 7000 முதல் 8000 தியேட்டர்கள் வரை தேவைப்படும். ஆனால் அந்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்குமா என்று சொல்ல முடியாது. இதனால் படத்தின் வசூலும் பாதிக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.