சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், வீரர்களின் அடையாளம் ஜல்லிக்கட்டு. காலம் காலமாக நடந்து வந்த இந்த வீர விளையாட்டு கடந்த இரண்டாண்டுகளாக தடைப்பட்டு கிடக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று தமிழகத்திலும் சரி, உலககெங்கிலும் உள்ள தமிழர்களும் சரி ஓங்கி குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்பு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இசை ஆல்பங்கள் மூலம் புகழ்பெற்று, இப்போது முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜல்லிகட்டிற்கு ஆதரவாக டக்கரு டக்கரு என்ற இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இந்த ஆல்பத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வரை இந்த ஆல்பத்தை 19 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இதனிடையே மதுரை வந்திருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும், நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா, ‛டக்டரு டக்கரு' குழுவை வாழ்த்தியதுடன் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று கூறினார்.
இதுகுறித்து மனோஜ் மேலும் கூறியதாவது... ஜல்லிக்கட்டு நம் கலாச்சாரத்தோடு ஒன்றியது, அதை பாதுகாப்போடு நடத்த வேண்டும். மாடுபிடி வீரர்களுக்கும் சரி, மாடுகளுக்கும் சரி எந்த பாதிப்பும் வராமல் நடத்த வேண்டும். ராஜாக்கள் காலத்தில் கூட ஒரு வீரன் என்றால் அவன் காளையை அடக்க வேண்டும். ஏன் ஒருவருக்கு பொண்ணு கேட்டு போனால் கூட காளையை அடக்க சொல்லி கேட்பார்கள். நம்முடைய பாரம்பரியத்தை, வீரவிளையாட்டை நாம் விடக்கூடாது. அதுவும் நம் மதுரை மண்ணுக்கே உரிய விளையாட்டு இந்த ஜல்லிக்கட்டு.
சினிமா பிரபலங்கள் சிலர் இந்த விளையாட்டை எதிர்த்திருக்கலாம், ஆனால் அவர்களுடைய பார்வை மிருக வதை என்ற கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்களுக்கு நம்முடைய கலாச்சாரம், பாரம்பரியம் எதுவும் தெரியாது, அவர்கள் அதை முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும். என்னை பொறுத்தவரை ஜல்லிக்கட்டை தடை பண்ணுவதில் உடன்பாடு கிடையாது.
தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும், அதை பாதுகாப்பாக நடத்த வேண்டும். அப்படி நடத்தினாலே இந்த விளையாட்டை எதிர்ப்பவர்கள் படிப்படியாக குறைந்துவிடுவார்கள்.
இவ்வாறு மனோஜ் பாரதிராஜா கூறினார்.