'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராஜா ராணிக்குப்பிறகு இரண்டு வருடங்களாக காத்திருந்து விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார் அட்லி. அந்த படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில், அடுத்த படம் குறித்து கேள்விகள் எழுந்தபோது, அடுத்த படம் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதற்கான கதையோ, ஹீரோவோ முடிவு செய்யவில்லை என்றார். அதையடுத்து, ஜீவா நடிப்பில் சங்கிலி புங்கிலி கதவை தொற என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், மீண்டும் அவர் விஜய் நடிப்பில் தெறி-2 படத்தை இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், பின்னர் அஜித்தை வைத்து தனது அடுத்த படத்தை அவர் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தற்போது பரபரப்பு செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால், சிவா இயக்கத்தில் தற்போது நடிக்கவுள்ள அஜித், அதற்கடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்றும் ஒரு செய்தி பல மாதங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதோடு, தெறி படத்தை அடுத்து கார்த்தியை வைத்து அட்லி தனது மூன்றாவது படத்தை இயக்குவதாகவும் கூறப்பட்டது. பின்னர் அதுவும் அடங்கிப்போனது. ஆக, அடுத்து அட்லி எந்த ஹீரோவை வைத்து படம் இயக்கப்போகிறார் என்பது சஸ்பென்சாகவே உள்ளது. அவரும் அதுபற்றி எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. காரணம், விஜய்யை இயக்கி விட்ட அட்லி அடுத்தபடியாக யாரேனும் முன்னணி ஹீரோவை வைத்துதான் படம் இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். ஆனால் இவர் கால்சீட் கேட்கும் ஹீரோக்கள் வெவ்வேறு படங்களில் கமிட்டாகியிருப்பதால் யாரும் பிடிகொடுக்காமல் இருக்கிறார்களாம். அதனால் அடுத்த படம் குறித்து கடும் குழப்பத்தில் இருக்கிறாராம் அட்லி.