பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டோலிவுட்டில் முன்னணி நடிகையாக கோலொச்சி வந்த நடிகை இலியானா பாலிவுட்டி கனவு கன்னி ஆகும் ஆசையில் தற்போது பட வாய்ப்புகள் இன்றி திருமணத்திற்கு தயாராகி வருகின்றார். த்ரிஷாவும் இலியானாவும் சமகாலத்தில் தெலுங்கு திரை உலகில் வளர்ந்தவர்கள் என்பதால் இருவரும் நல்ல தோழிகளாகவும் பழகி வருகின்றனராம். இ ந் நிலையில் த்ரிஷா நடித்து வரும் நாயகி எனும் திகில் படத்தைக் காண் ஆவலுடன் இருப்பதாக இலியானா கூறியுள்ளார்.
மேலும் திகில் படங்கள் பார்பதற்கு பயப்படும் இலியானா நாயகி படத்தை விரும்பக் காரணம் அப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் தானாம். நாயகி படத்தின் டிரைலர் குறித்து இலியான கூறுகையில், நாயகி படத்தின் டிரைலரில் திகிலூட்டும் வகையில் த்ரிஷா மிரட்டியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். நாயகி திரைக்கு வரும் முதல் நாளன்றே இப்படத்தை பார்க்க ஏற்பாடு செய்யுமாறு தனது மேலாளரிடமும் இலியானா தெரிவித்துள்ளார்.
த்ரிஷா திரை உலகிற்கு வந்து 10 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் தற்போது தான் நாயகியை மையப்படுத்தும் படங்களில் நடிக்க முயற்சித்து வருகின்றார். த்ரிஷா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் நாயகி என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை இயக்குனர் கோவி இயக்குகின்றார். இப்படம் ஜூலை 15ல் திரைக்கு வரவுள்ளது.