ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கதை தேடல் நடந்தது. இறுதியாக இயக்குனர் பூரி ஜெகன்நாத் கூறிய ஆட்டோ ஜானி படத்தில் சிரஞ்சீவி நடிக்க சம்மதம் தெரிவித்தார். வேலைகள் துவங்க இருந்த நேரத்தில் அட்டோ ஜானி படத்தின் இரண்டாம் பாதியில் சில மாற்றங்கள் செய்யுமாறு சிரஞ்சீவி இயக்குனரிடம் கூறினார். ஜெகன்நாத் செய்த மாற்றங்கள் சிரஞ்சீவிக்கு திருப்பி தரததால் அப்படம் கைவிடப்பட்டது. பின்னர் ஆட்டோ ஜானி படத்தில் ரவி தேஜா நடிப்பதாகவும் கூறப்பட்டது.
தற்போது விஜய் நடித்த கத்தி திரைப்படம் கத்திலான்டோடு என்ற பெயரில் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தின் முற்கட்ட படப்பிடிப்புகள் நடைபெறுகின்றது. இந்நிலையில் சிரஞ்சீவியின் 151வது திரைப்படமாக ஆட்டோ ஜானி படத்தை உருவாக்க இயக்குனர் பூரி ஜெகன்நாத் திட்டமிட்டுள்ளாராம். இரண்டாம் பாதியை முழுவதுமாக மாற்றி அமைத்துள்ள ஜெகன்நாத் சிரஞ்சீவியைச் சந்திக்க முயற்சி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. தற்போது கல்யாண் ராம் நடிப்பில் ஐஎஸெஎம் எனும் படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கிவருகின்றார்.