தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கெளதம்மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த சிம்பு-திரிஷா ஜோடியை அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திலும் இணைக்க ஆசைப்பட்டார் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன். ஆனால், அந்த படத்தின் கதையைக்கேட்ட திரிஷா, தந்தையாக நடிக்கும் சிம்புவுக்கு தன்னை ஜோடியாக நடிக்க சொன்னதால், இந்த படத்தில் நான் முதிர்ச்சியான வேடத்தில் நடித்தால் பின்னர் தொடர்ந்து அந்த மாதிரியே நடிக்க அழைப்பார்கள் என்று மறுத்து விட்டார்.
அதையடுத்து சில முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இப்போது ஸ்ரேயா கமிட்டாகி விட்டார். சமீபகாலமாக முதிர்ச்சியான வேடங்களில் நடித்து வரும் ஸ்ரேயா, திரிஷ்யம் இந்தி ரீமேக்கில் 15 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்தார். அந்த வகையில், இப்போது அவர் இமேஜ் பார்ப்பதில்லை. பர்பாமென்ஸ் பண்ண எந்த அளவுக்கு ஸ்கோப் உள்ளது என்பதை பார்த்துதான் படங்களை ஓகே செய்கிறாராம்.
அதனால் சிம்புவின் இந்த படம் சம்பந்தமாக அவரிடம் பேசியபோது, டபுள் ஓகே சொல்லி விட்டாராம் ஸ்ரேயா. காரணம், கதைப்படி சிம்புவுடன் அவருக்கு நிறைய ரொமான்ஸ் காட்சிகள் உள்ளதாம். ஒரு டூயட்டும் உள்ளதாம். அதனால் இப்போது அந்த படத்தில் நடிக்க மறுத்த திரிஷா, படம் திரைக்கு வரும்போது ஒரு நல்ல படத்தை இழந்து விட்டோமே என்று பீல் பண்ணுவார் என்கிறார்கள்.