ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
‛எங்கேயும் எப்போதும்' படத்தில் முதன்முறையாக ஜெய்யும், அஞ்சலியும் இணைந்து நடித்தனர். அந்தப்படத்தில் இவர்களது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி இருவரும் காதலிப்பதாக கூட செய்திகள் வந்தன. அதன்பிறகு அஞ்சலி, தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னையால் ஆந்திரா பக்கம் போனார். தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார் அஞ்சலி.
இந்நிலையில் எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு ஜெய்யும், அஞ்சலியும் மீண்டும் ஒரு படத்தில் தற்போது இணைந்து நடிக்கிறார்கள். புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்குகிறார். 1989ம் ஆண்டு பின்னணியில் நடக்கும் திகில் கதை. ஜெய் மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமல் இருந்தநிலையில் இருதினங்களுக்கு முன்னர் படத்தின் பூஜை சென்னையில் நடந்தது.
இதனிடையே இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று ஆரம்பமான நிலையில் படத்தின் தலைப்பும் வெளியாகியிருக்கிறது. படத்திற்கு ‛பலூன்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜெய் உடன் நடிப்பது மகிழ்ச்சி என்று நடிகை அஞ்சலி தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதுடன் ஜெய்யுடன் ஷூட்டிங்கில் எடுத்த போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.
சண்டை இயக்குனர் திலீப் சுப்பாராயன், டி.என்.அருண் பாலாஜி, கந்தசாமி நந்தகுமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.