12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' |
லொள்ளு சபாவில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர் சந்தானம். வடிவேலு வுக்குப்பிறகு முன்னணி காமெடியன் இடத்தைப்பிடித்தார். பின்னர் வல்ல வனுக்கும் புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக அரிதாரம் பூசினார். காமெடி யனுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று விமர்சனங்கள் எழுந்தபோதும், இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடித்து சொன்னார் சந்தானம். அதோடு, இனிமே இப்படித்தான் படத்தை அடுத்து இப்போது தில்லுக்குத் துட்டு என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டி ருக்கிறது.
இந்நிலையில், நாயகனாக நடித்த முதல் படத்திலேயே பாடல் காட்சிகளில் மற்ற ஹீரோக்களுக்கு இணையாக ஆடிய சந்தானம், தில்லுக்குத்துட்டு படத்தின் பாடல்களில் இன்னும் சிறப்பாக நடனமாடி அசத்தியுள்ளார். சில நடன அசைவுகளில் அழகியலுடன் அவர் ஆடியிருப்பதைப்பார்த்து கோலிவுட்டின் சில இளவட்ட ஹீரோக்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, காமெடியனுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று முன்பு கூறியவர்களே, சந்தானம் ஹீரோவாகவும் தன்னை முழுசாக தயார்படுத்தி விட்டார் என்று கூறுகிறார்கள்.
அதோடு கடந்த வியாழன் அன்று வெளியான தில்லுக்குத்துட்டு படம் முதல் நாள் மட்டுமே தமிழகத்தில் 4 கோடி வசூலித்துள்ளதாம். இது முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.