தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சூர்யா, ஏற்கெனவே அவருடைய அகரம் தெண்டு நிறுவனம் மூலம் படிக்க முடியாத பல ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்து வருகிறார். அது தவிர, மேலும் பல உதவிகளையும் அவ்வப் பேது செய்து வருகிறார். சமீபத்தில் மீண்டும் ஒரு உதவியை எந்த விளம்பரமும் இல்லாமல் செய்திருக்கிறார்.
'24' படத்தில் அவர் பயன்படுத்திய அந்த விலை உயர்ந்த வீச் சேரை, 'தி ஸ்பைனல் ஃபவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். அந்த தொண்டு நிறுவனம் அதை விரைவில் ஆரம்பமாக உள்ள 'சண்டிகர் ஸ்பைனல் ரிஹேப்' மையத்திற்குக் கொடுக்க உள்ளது. அந்த வீல் சேரை இரண்டு கால்களும், கைகளும் 'குவாட்ரிபிலஜிக்' கால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பயிற்சிக்குப் பயன்படுத்த உள்ளார்கள்.
ஆயிரம் இரண்டாயிரம் அன்பளிப்பாகத் தந்தாலே ஐந்தாயிரம் ரூபாய் செலவு செய்து பிளக்ஸ் வைத்துக் கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் இந்த விஷயம் குறித்து சூர்யா தரப்பிலிருந்து இதுவரை எந்தத் தகவலும் வெளியில் வரவில்லை. இது பற்றி கூட அந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் வெளியில் சொன்னதால்தான் இந்தத் தகவல் வெளியில் வந்துள்ளது. இப்படிப்பட்ட விஷயங்கள் வெளியில் தெரிவதில் எந்தத் தவறும் இல்லை. இதைப் படிப்பவர்களில் ஒரு சிலர் தங்களால் முடிந்த விஷயங்களைத் தானமாகத் தருவார்கள் இல்லையா...?.