டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு நிறைய நடிகைகள் வந்திருக்கிறார்கள், அவர்களில் சமீபத்திய வரவு மஞ்சிமா மோகன். கேரளாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக பயணத்தை தொடங்கி, ‛ஒரு வடக்கன் செல்பி'யில் ஹீரோயினாக அறிமுகமானார் மஞ்சிமா. அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, அவரை அப்படியே தமிழுக்கும் கொண்டு வந்துவிட்டது. முதல்படமே கெளதம் மேனனின் ‛அச்சம் என்பது மடமையடா'. இப்படத்தில் தமிழ் பதிப்பில் சிம்புவுடனும், தெலுங்கில் நாக சைதன்யாவுடனும் நடித்துள்ளார். தமிழில் சில படங்களில் நடிக்க பேசி வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனக்கு எல்லா நடிகைகளுமே போட்டி தான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛தினமும் புதுபுது நடிகைகள் வந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு இவர் ஒருவர் தான் போட்டி என்று சொல்ல மாட்டேன். எல்லோருமே எனக்கு போட்டியாளர்கள் தான். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு கவலையில்லை, என்னுடைய கவனம் எல்லாம் நடிப்பில் மட்டுமே இருக்கும். எனக்கான படங்கள் கிடைத்தே தீரும், அதையாரும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.