தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2003ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய கார்த்திக்கு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. நேரடியாக இயக்குனர் மணிரத்னத்தைச் சந்தித்து அவருடைய உதவியாளராகச் சேர்ந்து கொள்கிறார்கள். உதவியாளராகப் பணியாற்றிய முதல் படத்திலேயே அண்ணன் சூர்யா தான் கதாநாயகன். அந்தப் படத்திலேயே சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கும்படி கார்த்தியை கேட்கிறார் இயக்குனர் மணிரத்னம். ஆனால், தனக்கு இயக்கத்தில்தான் விருப்பம், நடிப்பில் இல்லை எனச் சொல்கிறார். அவர் உதவியாளராகப் பணியாற்றிய படம் ஆய்த எழுத்து. அதன் ஹிந்திப் பதிப்பான யுவாவிலும் உதவியாளராகப் பணியாற்றுகிறார் கார்த்தி.
ஆனால், அடுத்த வருடத்திலேயே நடிகராக மேக்கப் போடுகிறார் கார்த்தி. அப்பா சிவகுமாரின் அட்வைஸ் கார்த்தியை நடிகராக்குகிறது. அமீர் இயக்கத்தில் பருத்தி வீரன் படத்தில் நடிக்க ஆரம்பிக்கிறார். 2007ல் வெளிவந்த பருத்திவீரன் மாபெரும் வெற்றி பெற கார்த்தி தற்பேது தமிழில் முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
இப்போது 2016ல் யார் கேட்டு நடிக்க மாட்டேன் என்றாரோ அவரது இயக்கத்திலேயே நாயகனாக நடிக்கப் போகிறார் கார்த்தி. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள காற்று வெளியிடை படத்தின் படப்பிடிப்பு இன்று ஊட்டியில் ஆரம்பமாகிறது. தம்பி கார்த்திக்கு மனதார வாழ்த்து செல்லியிருக்கிறார் அண்ணன் சூர்யா.
“எனது தம்பியின் கனவுப்படம் என்றுதான் சொல்வேன். 2003ம் ஆண்டில் மணிரத்னம் சார் படத்தில் உதவியாளர். இப்பேது ஹீரோ, எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.