ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சல்மான் நடித்த 'சுல்தான்' படம் ரம்ஜான் பண்டிகையையட்டி நேற்று வெளிவந்தது. முதல் நாளிலியே 36 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இமாச்சல் பிரதேசத்தில் ஒரு ரசிகர் தன் மனைவி எந்த தொல்லையும் இல்லாமல் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு தியேட்டாரின் அனைத்து டிக்கெட்டுகளையும் தானே முன்பதிவு செய்து முதல் நாள் முதல் ஷோவை தனது மனைவியுடன் அமர்ந்து பார்த்துள்ளார்.
இமாச்சல பிரதேசம் ஹமிர்பூர் நகரைச் சேர்ந்தவர் சங்கர் முசாபீர். இவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது காதலி கீதாஞ்சலியை மணந்தார். கீதாஞ்சலி தீவிரமான சல்மான்கான் ரசிகை என்பது அவருக்குத் தெரியும். அதனால் அவருக்கு ஏதாவசது சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். சல்மான்கானை நேரில் அழைத்துச் சென்று காட்டும் அவரது முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில்தான் 'சுல்தான்' படத்தை மனைவியுடன் தனியாக அமர்ந்து பார்த்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்து ஹமிர்பூர் நகரில் உள்ள ஒரு மால் தியேட்டரின் 120 டிக்கெட்டுகளையும் தானே முன்பதிவு செய்தார். நண்பர்களுடன் பார்க்க போவதாக தியேட்டர் நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார். ஆனால் படம் பார்க்க கணவன் மனைவி இருவர் மட்டுமே வந்திருந்தனர். இதை பார்த்து தியேட்டர் ஊழியர்கள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தனர். மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகிழ்ச்சியில் படம் பார்த்து திரும்பினார் சங்கர் முசாபீர்.