‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கோலிவுட்டில் உள்ள பல டைரக்டர்கள் பின்னர் நடிகர்களாகவும் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வரிசையில், மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் போன்ற படங்களை இயக்கி விட்டு நடிகரானவர் தம்பி ராமைய்யா. மேலும், படம் இயக்கும்போது படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த தம்பிராமைய்யாவுக்கு மைனா படத்தில் நல்லதொரு போலீஸ் வேடத்தை கொடுத்தார் டைரக்டர் பிரபுசாலமன். அந்த வேடம் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை பெற்றுக்கொடுத்தது. அதனால் பின்னர் கவனிக்கப்படும் நடிகராகி விட்ட தம்பி ராமைய்யா, இப்போது தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மேலும், இப்போது தான் வளர்ந்து விட்டபோதும், நடிப்பில் தனக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்த டைரக்டர் பிரபுசாலமனை அவர் குறிப்பிட தவறுவதில்லை. மைனாவைத் தொடர்ந்து கும்கி படத்தில் நடித்துள்ள தம்பி ராமைய்யா, இப்போது பிரபுசாலமன் இயக்கியுள்ள தொடரி படத்திலும் கேன்டீன் ஓனராக நடித்துள்ளார். அவரிடத்தில் டீ பயாக வேலை செய்யும் வேடத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். இந்த படத்திலும் மைனா, கும்கி போன்று தம்பிராமைய்யாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம்தானாம்.
இதுபற்றி அவர் கூறுகையில், பிரபுசாலமன் படம் என்றால் எனக்கு அழுத்தமாக வேடம் கிடைக்கிறது. மைனா படத்தில் எனக்கு அருமையாக நடிப்பு சொல்லிக்கொடுத்தார். அதனால்தான் தேசிய விருது கிடைத்தது. அதேபோல் அதற்கடுத்து கும்கி, தொடரி படங்களிலும் எனக்கு நல்ல வேடம் கொடுத்து எனக்கு நல்ல நடிப்பை சொல்லிக்கொடுத்தார். அதைதான் நான் பிரதிபலித்திருக்கிறேன். அந்த வகையில், நடிப்பைப் பொறுத்தவரை எனது குருநாதர் டைரக்டர் பிரபுசாலமன்தான் என்கிறார் தம்பி ராமைய்யா.