'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
எந்த ஒரு விருது வழங்கும் விழா ஆகட்டும், அதில் மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லாலும், மம்முட்டியும் தவறாது கலந்து கொள்வதை பார்க்கமுடியும்.. இதில் ஏதோ ஒன்றிரண்டு விடுபட்டு போகலாம். ஆனால் இவர்களுடன் சேர்ந்த மும்மூர்த்திகளில் ஒருவரான சுரேஷ்கோபியை மட்டும் எந்த ஒரு விழாவிலும் பார்க்கவே முடியாது.. காரணம் இதுபோன்ற விழாக்களில் கலந்துகொள்வதை அவர் ஆரம்பத்தில் இருந்தே தவிர்த்து வந்தவர் தான்.. அவரது படம் தொடர்பான புரமோஷன், ஆடியோ ரிலீஸ் விழாக்களிலேயே கலந்துகொள்ளமாட்டார்.. சுருக்கமாக சொன்னால் மலையாள சினிமாவின் 'தல' அவர் தான்..
சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற மலையாள நடிகர்சங்க விழாவில் கலந்துகொள்ள கூட மறுத்தவர்தான்.. அதன்பின் அது முறையாக இருக்காது என பலர் வலியுறுத்த போனால் போகிறதென்று அதில் மட்டும் கலந்துகொண்டார்.. இத்தனையையும் இங்கே சொல்வதற்கு காரணம் இருக்கிறது. சமீபத்தில் டொராண்டோவில் நடைபெற்ற FIMCA விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.. அதுதான் ஆச்சர்யம்.. இந்த விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவருடன் நடிகர்கள் திலீப், மம்தா மோகன்தாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். திலீப்புக்கு சிறந்த நடிகர் விருதும், மம்தாவுக்கு சிறந்த நடிகை விருதும் வழங்கப்பட்டன.