பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிவாஜி குடும்பத்தில் 3வது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் விக்ரம் பிரபு. ஏற்கெனவே சிவாஜி ஆரம்பித்த சிவாஜி புரொடக்ஷன் உள்ளது. கடைசியாக அது 'சந்திரமுகி' படத்தை தயாரித்தது. அதன் பிறகு ராம்குமாரின் மகன் துஷ்யந்த 'ஈசான் புரொடக்ஷன்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் விக்ரம் பிரபு 'பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' என்ற நிறுவனத்தை தொடங்கி 'நெருப்புடா' என்ற முதல் படத்தை தயாரிக்க இருக்கிறார். தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது ஏன்? என்பது பற்றி விக்ரம் பிரபு அளித்த விளக்கம் வருமாறு:
நடிகர் திலகத்தின் குடும்பத்தில் பிறந்தாலும் ஆரம்பத்தில் எனக்கு நடிக்கும் ஆர்வம் இல்லை. தாத்தா, அப்பாவை விடவா பெரிதாக சாதித்து விடப்போகிறோம் என்ற எண்ணமே இருந்தது. அதனால் நான் இயக்குனராவது என்று முடிவு செய்தேன். நியூயார்க் பிலிம் அகாடமியில் இயக்கம் கற்றேன். அதன் பிறகு சென்னை வந்து இயக்குனர் விஷ்ணுவர்த்தனிடம் உதவியாளராக சேர்ந்தேன். படம் இயக்குவதற்காக இரண்டு மூன்று கதைகளும் வைத்திருந்தேன்.
இந்த நிலையில்தான் ஒரு முறை தாணு சார் வீட்டுக்கு வந்தபோது “விக்ரம் உன்னிடம் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் இருக்கிறது. உன்னை நான் ஹீரோவாக்குகிறேன் உனக்காகவே ஒரு படம் தயாரிக்கிறேன்” என்றார். அப்போதுதான் எனக்குள் நடிப்பு ஆசை வந்தது. நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்பதை அறிந்து பிரபுசாலமன் வந்து 'கும்கி' கதை சொன்னார். அதன்பிறகு தாணு சாரிடம் அனுமதி பெற்ற கும்கியில் நடித்தேன்.
சினிமாவுக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிறது. நான் நடித்த படங்கள் ஒரு நடிகனாக என்னை நிரூபிக்க வைத்தது. நடிகராக இருந்தாலும் ஒரு தயாரிப்பாளரின் வலி தெரியவேண்டும், நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினேன்.
தாத்தாவை அறிமுகப்படுத்திய ஏவிஎம் நிறுவனத்தின் சரவணன் சார் கம்பெனியை துவக்கி வைத்தார். என்னை நடிப்புக்கு அறிமுகப்படுத்திய தாணு சார் படத்தை தொடங்கி வைத்தார். நான் தயாரிக்கும் முதல் படத்தில் ரஜினிசார் வர வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக அவரது ரசிகனாக படத்தில் நடிக்கிறேன் என்கிறார் விக்ரம் பிரபு.