பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நாய்களுக்கு ஒன்று என்றால் துடிதுடித்து போய்விடுவார் நடிகை த்ரிஷா. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரில், நான்காவது மாடியில் இருந்து பெண் நாய் குட்டியை மருத்துவ மாணவர் ஒருவர் தூக்கி வீசியதும், அதை மற்றொரு மாணவர் வீடியோ பதிவு செய்ததும் இணையதளங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தின. இதுதொடர்பாக மாணவர்கள் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர், பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே நடிகை த்ரிஷா இந்த சம்பவத்திற்கு தன் டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது... நாயை காப்பாற்றிய நிஜ, ஹீரோக்களான ஷ்ராவன், ஜெனிபர், ஆண்டனி ஆகியோருக்கு நன்றி. இந்த குற்றச் செயல் புரிந்தவர்களின் மருத்துவ உரிமத்தை சம்பந்தப்பட்ட துறையினர் ரத்து செய்வார்கள் என எண்ணுகிறேன் என, த்ரிஷா காட்டமாக குறிப்பிட்டு உள்ளார்.
நடிகை த்ரிஷா, பீட்டா விலங்குகள் நல அமைப்பில் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.