தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்தவர் காயத்ரி. அதன்பிறகு ரம்மி, மெல்லிசை என சில படங்களில் நடித்தார். இதில் மெல்லிசை விஜய சேதுபதியுடன் அவர் மூன்றாவதாக இணைந்த படம். ஆனால் அந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாக்களெல்லாம் விமரிசையாக நடந்த நிலையில், படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
அந்த மெல்லிசை படத்தில் காயத்ரியின் நடிப்பைப்பார்த்து விட்டு, இந்த படம் காயத்ரியை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்று கூறினார் விஜயசேதுபதி. ஆனால் அந்த படம் இன்னும் தியேட்டருக்கே வரவில்லை. விளைவு, அடுத்த படமே இல்லாமல் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அச்சம் தவிர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் காயத்ரி.
அவரிடத்தில் பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து விட்டீர்கள். அடுத்தபடியாக சீரியல்களில் நடிக்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டால், சினிமாவை ரொம்பவே நம்புகிறேன். சினிமாவில் பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்றுதான் பெங்களூரில் இருந்த சென்னைக்கு வந்தேன். ஆனால், நல்ல ஓப்பனிங் கிடைத்தபோதும் இப்போது நிலைமை சரியில்லாமல் உள்ளது. என்றாலும் இந்த நிலையும் மாறும். மெல்லிசை திரைக்கு வரும்போது புதிய படங்கள் கண்டிப்பாக எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் காயத்ரி.