ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பாகுபலி' படம் வெளிவரும் வரை எஸ்.எஸ்.ராஜமௌலி யார் என்பது தீவிர சினிமா ரசிகர்களுக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும். ஆனால், அந்தப் படத்திற்கும் முன்பே 'நான் ஈ' என்ற வித்தியாசமான படம் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களை வியக்க வைத்தவர் ராஜமௌலி. 'நான் ஈ' என்று 2012ம் ஆண்டிற்கு முன்பு அப்படம் பற்றிய விளம்பரம் வந்த சமயத்தில் 'ஈ'யை வைத்து ஒரு படமா ? என பலரும் ஆச்சரியப்பட்டார்கள், ஏன் கிண்டல் கூடச் செய்தார்கள். படம் வெளிவந்த பின் கிண்டல் செய்தவர்கள் வாயடைத்துப் போனார்கள்.
கிராஃபிக்ஸ்-ல் உருவாக்கப்பட்ட 'ஈ' தான் படத்தின் நாயகன், சமந்தா கதாநாயகி, சுதீப் வில்லன். ஒவ்வொரு காட்சியுமே படத்தில் பரபரக்க வைத்த ஒன்று. கடைசியில் ஈ எப்படியாவது வில்லனைப் பழி வாங்கி விடாதா என யோசித்தவர்கள்தான் அதிகம்.
தமிழ், தெலுங்கில் தயாராகி இதே நாளில் 4 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'நான் ஈ' திரைப்படம் இன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டு மொழிகளிலுமே இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு சமந்தா தமிழிலும் முன்னணி ஹீரோயின்கள் வரிசையில் இடம் பிடித்தார். கன்னட ஹீரோவான சுதீப்பும் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தென்னிந்திய அளவில் தமிழ் இயக்குனராக ஷங்கர் மட்டுமே பிரம்மாண்டமான வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் இயக்குனர் என்ற பெயரை வைத்திருந்தார். அவருக்குச் சரியான போட்டியாக தற்போது எஸ்.எஸ்.ராஜமௌலியும் உருவெடுத்திருக்கிறார்.
நான்கு வருடங்கள் நிறைவுற்ற பின்னரும் 'நான் ஈ' படம் நம்மை நினைக்க வைக்கிறதென்றால் அந்தப் படத்தின் ஈர்ப்பு அந்த அளவிற்கு நம் மனதில் நிலைத்து நின்றிருக்கிறது என்றுதான் அர்த்தம்.