ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் |
சிறை சென்று திரும்பியிருக்கும் நடிகர் சஞ்சய் தத், மீண்டும் படங்களில் பிஸியாகியிருப்பதால் அவரை வைத்து படம் இயக்க பலர் முயற்சித்து வருகின்றனர், அவர்களில் இயக்குநர் இந்திர குமாரும் ஒருவர். ஏற்கனவே சஞ்சய் தத்தை வைத்து தமால், டபுள் தமால் படங்களை கொடுத்தவர், இப்போது தமால் படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க எண்ணியுள்ளார்.
இதுகுறித்து இந்திர குமார் கூறியிருப்பதாவது... ‛‛தமால் படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிக்க பல நடிகர்கள் தயாராக உள்ளார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை இந்த படத்தின் ரோலுக்கு சஞ்சய் தத் தான் மிகச்சரியானவர். தமால்-3-க்காக நான், மூன்றாண்டுகள் சஞ்சய் தத்திற்காக காத்திருக்கிறேன். அடுத்தாண்டு இப்படத்தை இயக்கலாம் என்று எண்ணியுள்ளோம். இந்த தமால்-3 படத்தில் சஞ்சய் தத்தை முற்றிலும் வேறுவிதமாக அவரது ரசிகர்கள் பார்க்கலாம்'' என்று கூறியுள்ளார்.