ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பாளர் மட்டுமல்லாது சிறந்த பாடகர். அவரின் தனித்துவமான குரல் அவரது அடையாளமாக இருந்தது. திரைப்படங்கள், ஆல்பங்கள், பக்தி பாடல்கள் என நூற்றுக் கணக்கான பாடல்களை அவர் பாடியுள்ளார். அவர் கடைசியாக பாடிய பாடல் “அலையே ஓ அலையே...” என்ற தனிப் பாடல். இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார், சதீஷ் சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார்.
இந்த பாடலை அவரது முதல் நினைவு நாளான வருகிற 14ந் தேதி டிரண்ட் மியூசிக் வெளியிடுகிறது. இதில் திரையுலக முன்னணியினர், இசை அமைப்பாளர்கள், பாடகர், பாடகிகள், எம்.எஸ்.விஸ்வநாதன் குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள். அனேகமாக இளையராஜா வெளியிடலாம் என்று தெரிகிறது.