ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அண்மைக்காலமாக பேய்ப்படங்களை மக்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. சமீபத்தில் வெளியான பல பேய்ப்படங்கள் தோல்வியடைந்து வருகின்றன. இந்நிலையில், இயக்குனர் செல்வராகவனும் தன் பங்குக்கு 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற பேய்ப்படத்தை இயக்கி வருகிறார். இயக்குர் ஸ்ரீதரின் காலத்தால் அழிக்க முடியாத படத்தின் தலைப்பை தான் இயக்கும் பேய்ப்படத்துக்கு சூட்டி இருக்கிறார். 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது டப்பிங், ரீரெகார்டிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் நெஞ்சம் மறப்பதில்லை படம் குறித்து தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளன. எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் 'மரியம்' என்ற குழந்தை பராமரிப்பாளர் கேரக்டரில் நடிக்கிறார் ரெஜினா கெஸன்ட்ரா. வில்லியாக நந்திதா நடித்திருக்கிறாராம்.
அதுமட்டுமில்லாமல், எஸ்.ஜே.சூர்யாவுக்கும், நந்திதாவுக்கும் இடையே நடைபெறும் சண்டைக்காட்சிகள் ரசிகர்களை நடு நடுங்க வைக்கும் அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளதாம். செல்வராகவனின் முதல் பேய்ப்படம் என்பதால் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் பல புதிய விஷயங்களை எதிர்பார்க்கலாம்! என்கிறார்கள் செல்வராகவன் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.