ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித்தான்' என சந்தானம் ஹீரோவாக நடித்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும் மனம் தளராமல் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள மூன்றாவது படம் 'தில்லுக்கு துட்டு'. இந்தப் படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ஷனன்யா நடித்துள்ளார். ஹாரர் மற்றும் காமெடி ரக படமாக உருவாகியுள்ள 'தில்லுக்கு துட்டு'விற்கு தமன் இசை அமைத்துள்லார். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தானத்தை வைத்து விஜய் டிவியில் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியை இயக்கிய ராம்பாலா தில்லுக்கு துட்டு படத்தை இயக்கியுள்ளார். அனைத்து பணிகளும் முடிவடைந்தநிலையில் இப்படம் கடந்த மாதமே ரிலீசுக்கு தயாராகியநிலையில், சந்தானம் - ராம்பாலாவை வைத்து படம் தயாரிக்க அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனால் இப்படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட முடியாதநிலை உருவானது.
இந்நிலையில், வரும் 7-ஆம் தேதி தில்லுக்கு துட்டு படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது படத்தை எப்படி வெளியிட முடியும்? சம்மந்தப்பட்ட தயாரிப்பாளரை அழைத்த சந்தானம் அவருக்கு செட்டில்மெண்ட் செய்துவிட்டதாகவும், அதனால் பட ரிலீஸில் பிரச்சனை இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே கோர்ட்டும் இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட இருவரும் பேசி தீர்த்து கொள்ளவும் என்று அறிவுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.