'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நான்கு மாதங்களாகியும் இன்னும் கூட மர்மம் விலகாத ஒரு மரணமாகவே இருக்கிறது மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவரது மரணம் குறித்த விதவிதமான செய்திகள் வந்துகொண்டிருந்தன.. இப்போதுதான் சற்றே அவை அடங்கியுள்ளன என்று கூட சொல்லலாம். ஆனாலும் கலாபவன் மணியின் தம்பி ராமகிருஷ்ணன், இன்னும் தனது அண்ணனின் நெருங்கிய நண்ண்பர்கள் சிலர்தான் அவரது மரணத்துக்கு காரணம் என்று குற்றம் சாட்டி வருகிறார்..
கலாபவன் மணியின் வீட்டில் பூஜை ஒன்றில் கலந்துகொள்ளும் சாமியார் ஒருவர், கலாபவன் மணியின் கையை பிடித்துக்கொண்டு, “உனக்கு நெருக்கமானவர்களே உன்னை முதுகில் குத்துவார்கள்.. அதனால் கவனமாக நடந்துகொள்” என கூறுவதாகவும், அதற்கு கலாபவன் மணி 'சரிங்க சாமி' என கூறுவதாகவும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.