துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
சூப்பர் ஸ்டார் ரஜினி படம் வெளிவரும்போது பெங்களூருவில் உள்ள அவரது ரசிகர்கள் ரஜினி கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடுவார்கள். இதனை எதிர்த்து பெங்களூரைவைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் பெங்களூர் மாநகர குடிமையியல் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் “ஒவ்வொரு முறை ரஜினி படம் வெளிவரும்போதெல்லாம் ரசிகர்கள் அவரது கட்அவுட்டுக்கு ஆயிரக்கணக்கான லிட்டரில் பாலாபிஷேகம் செய்கிறார்கள். குழந்தைகளும், முதியவர்களும் குடிக்க பாலின்றி அலையும் சூழ்நிலையில் இதுபோன்ற பாலாபிஷேகங்களில் பால் வீணாக்கப்படுவதை தடுக்க கட்அவுட் பலாபிஷேகத்தை தடை செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக ரஜனி பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்ததது ரஜினி சார்பில் ஆஜரான வழக்கறிஞர். “ரஜினி உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வருவதால் பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை. அவர் வந்ததும் தாக்கல் செய்கிறோம் என்று கூறினார். இதையடுத்து வழக்கை ஆகஸ்ட் மாதம் 17ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.