ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவின் பிதாமகனாக கொண்டாடப்படும் அடூர் கோபாலகிருஷ்னுக்கு இன்று 75 வது பிறந்த நாள். அவரை பற்றிய சில நினைவுகள்...
அடூர் கோபால கிருஷ்ணன் புனே திரைப்படக் கல்லூரியில் சினிமா இயக்கத்தில் பட்டம் பெற்று முறைப்படி சினிமாவுக்கு வந்தவர். இவரது முதல் திரைப்படம் 'ஸ்வயம்வரம்' 1972ம் ஆண்டு வெளிவந்தது. மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் அது. முதல் படமே தேசிய விருது பெற்றது. சினிமா வெறும் பொழுதுபோக்கு சாதனமல்ல கலாச்சாரத்தையும், சமூகத்தையும் அதன் மூலம் வளர்த்தெடுக்க முடியும் என்று சொன்னார். இதுவரை இல்லாத புதுமையான விஷயங்களை கையாண்டு ஒவ்வொரு படத்தையும் இயக்கினார்.
30 வருடத்துக்கும் மேற்பட்ட சினிமா அனுபவத்தில் கொடியட்டம், எலிப்பத்தாயம், மதிலுகள், நிழல்குத்து, சுதா புருஷன், முகாமுகம், விதேயன் உள்பட இவர் இயக்கியது வெறும் 11 படங்கள்தான். ஆனால் 11 படங்களும் உலக புகழ்பெற்ற படங்கள். பத்மஸ்ரீ, தாதாசாகேப் பால்கே, 7 முறை தேசிய விருது என 50க்கும் மேற்பட்ட உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார்.