ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
களவாணி படத்தின் ஹிட் காரணமாக அதன்பிறகு இப்போதுவரை பல கிராமத்து கதைகளில் நடித்து வருகிறார் விமல். அதோடு, அவரது சம்பளமும் கைக்கு அடக்கமாக இருப்பதால், மினிமம் கியாரண்டி பட்ஜெட்டில் கிராமத்து கதை ரெடி பண்ணும் டைரக்டர்கள் அவரைதான் மனதில் கொள்கிறார்கள். அதன்காரணமாக, அவரை அடுத்த ராமராஜன் என்கிற அளவுக்கு கொண்டு வந்து விட்டனர். ஆனால் அந்த இமேஜை தன் மீது இன்னும் அழுத்தமாக விழுவதற்கு முன்பே அதிலிருந்து விடுபட்டு விட வேண்டும் என்று நினைக்கிறார் விமல்.
அதன்காரணமாக, இப்போது கிராமத்தை கதைகளை குறைத்து விட்டு நகரத்து கதைகளில் அதிகமாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு, அண்ணன்-தம்பி செண்டிமென்ட் கதைகளுடன் யாராவது டைரக்டர்கள் அவரைத்தேடிச்சென்றால், கதையே கேட்க மறுக்கிறாராம். இந்நிலையில், தற்போது நவ்தீப் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் அஞ்சான் சூர்யா கெட்டப்பில் வில்லனாக நடித்து வரும் விமல், இனிமேல் அதிரடியான காரசார கதாபாத்திரங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகவும் டைரக்டர்களிடம் கூறி வருகிறார்.