'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்த ‛தனி ஒருவன்' படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இப்படத்தில் ஸ்டைலிஷான வில்லனாக ரசிகர்கள் மத்தியில் அரவிந்த் சாமி வரவேற்பு பெற்றார். தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கில் துருவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது.
ராம் சரண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார். அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கின்றார். இசையமைப்பாளர் ஹிப்பாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைக்கின்றார். காஷ்மீரில் 10 நாட்கள் படப்பிடிப்பை முடித்து ஐதராபாத் திரும்பியுள்ள படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்புகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் இப்படத்தை தயாரிக்கின்றார். திரைப்படம் குறித்து அல்லு அரவிந்த் கூறுகையில், ராம் சரணின் வெற்றிப் படங்களில் ஒன்றாக துருவா அமையும், இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இப்படத்திற்காக கடுமையாக உழைத்து வருகின்றார். வில்லனாக நடித்து வரும் அரவிந்த் சாமி தமிழைப் போல் தெலுங்கிலும் இப்படத்தின் வாயிலாக முத்திரை பதிப்பார் என கூறியுள்ளார்.