கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்ககூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் புதுமுக நடிகைகளை இயக்குனர்கள் அடிப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. கே.பாலச்சந்தர் நடிகர்களுக்கு நடிப்பு வராவிட்டால் முதுகில் அடிப்பார், நடிகைகள் என்றால் தலையில் குட்டுவார். இது ஒரு குருவின் ஸ்தானத்தில் இருந்து செய்வது. ஆனால் கன்னத்தில் அறையும் கலாச்சாரத்தை பாரதிராஜா தொடங்கி வைத்தார். அன்று முதல் அது தொடர்ந்து வருகிறது. தங்கர் பச்சான் நவ்யா நாயரை அறைந்தார், சாமி - பத்மப்ரியாவை அறைந்தார். சமீபத்தில் பாலா அதர்வாவையும், வேதிகாவையும் கம்பால் அடித்தார். இப்போது அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுந்தர இளங்கோவனும் நடிகை அருந்ததியை நடிப்பு சரியாக வரவில்லை என்பதற்காக கன்னத்தில் அறைந்தார்.
சுந்தர இளங்கோவன் தற்போது அர்த்தநாரி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ராம்குமார் என்ற புதுமுகம் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அருந்ததி நடிக்கிறார். அருந்ததி ஒன்றும் புதுமுக நடிகை அல்ல வெளுத்துகட்டு படம் மூலம் அறிமுகமான அருந்ததி. போடிநாயக்கனூர் கணேசன், சுண்டாட்டம், நேற்று இன்று, தொட்டால் தொடரும் உள்பட தமிழ் மற்றும் கன்னடம் படங்களில் நடித்துள்ளார். இவரைத்தான் நடிப்பு வரவில்லை என்று இயக்குனர் சுந்தர இளங்கோவன் கன்னத்தில் அறைந்தார்.
காட்சிப்படி பொது இடத்தில் ஹீரோ ராம்குமார் கன்னத்தில் அருந்ததி கோபத்துடன் அடிக்க வேண்டும். அருந்ததியும் அடித்து நடித்தார். அதில் இயக்குனருக்கு திருப்தி ஏற்படவில்லை, திரும்ப திரும்ப டேக் போனது. இதனால் ஆத்திரம் அடைந்த இயக்குனர் பொதுமக்கள் கூடியிருப்பதையும், டெக்னீஷியன்கள் அருகில் நிற்பதையும் நினைத்துப் பார்க்காமல் அருந்ததி கன்னத்தில் ஓங்கி அறைந்து “இப்படி அறைய வேண்டும்” என்றார். வளர்ந்து வரும் நடிகையாயிற்றே எதுவும் சொல்லமுடியாமல் நடித்து முடித்து விட்டு அமைதியாக சென்று அமர்ந்து விட்டார் அருந்ததி. இந்த சம்பவம் யூனிட்காரர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“இதுவே முன்னணி நடிகையாக இருந்தால் அடிக்க முடியுமா? இயக்குனருக்கு முதல் படம், அருந்ததி 10 படங்களுக்கு மேல் நடித்தவர். இதுவே சரியாக வேலை செய்யவில்லை என்று ஒரு தொழிலாளியை கைநீட்ட முடியமா? பெப்சி சும்மா விடுமா? நடிக்க வரும் பெண்கள் பாவம்தான்” என்று படத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் கூறினார்கள்.