ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், தன்னுடைய சுல்தான் படம் தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில் தன்னை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் ஒப்பிட்டு பேசினார். அவரின் இந்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தியது. மகளிர் அமைப்பினர் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். தேசிய மகளிர் ஆணையம், சல்மான், நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியிருக்கிறது.
இந்நிலையில் சல்மானின் கருத்து குறித்து பாலிவுட்டின் சகநடிகரான ஷாரூக்கானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது... நானே சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்ச்சை கருத்துகளை கூறியிருக்கிறேன். ஆகையால் இந்த விஷயத்தில் நான் எந்த கருத்தும் சொல்லமுடியாது. மேலும் ஒருவரின் கருத்தை பற்றி ஆராய, விமர்சனம் செய்ய எனக்கும் எந்த தகுதியும் கிடையாது என்று கூறியுள்ளார்.