இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இயக்குனர் சுந்தர்.சியும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் வெவ்வேறு துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இருவரும் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியது இல்லை. ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம் படங்களை சுந்தர்.சி இயக்கியுள்ளார். ஆனாலும் அந்தப்படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவில்லை.
சுந்தர்.சியின் படங்களைப் பொறுத்தவரை அவரே ஹீரோ... அவரின் காமெடிக் காட்சிகளுக்காகவே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுக்கிறார்கள். அதனாலோ, என்னவோ, சிற்பி, இமான், ஹிப்ஹாப் தமிழா என தனக்கு அடக்கமான இசையமைப்பாளர்களை வைத்து படம் பண்ணி வந்தார். ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பெரிய இசையமைப்பாளரின் தயவு அவருக்கு இதுவரை தேவைப்பட்டதில்லை.
முதன்முறையாக இப்போது சுந்தர்.சி இயக்கும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் தேவைப்பட்டுள்ளார். இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறேன் என சமீபத்தில் சுந்தர்.சி அறிவித்திருந்தார். ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக இப்படம் உருவாகவிருக்கிறது என்றும் சொன்னார். அப்படத்தின் இசையமைப்பாளராக பணியாற்ற ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதிகாரபூர்வமாக இத்தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.